வாங் சுன் வாய் பெர்னாமா-வின் தலைவராக நியமனம்

பிரபல பத்திரிக்கையாளரும், ஸ்டார் ஆங்கில நாளேட்டின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான வாங் சுன் வாய், தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெர்னாமாவின் தலைவராக சேவையாற்றி வந்த செனட்டர் டத்தோ ரயிஸ் அடிபா ராட்சி – க்கு அடுத்து பெர்னாமாவின் புதிய தலைவராக வாங் சுன் வாய்நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங் சுன் வாய் -யின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
வாங் சுன் வாய் நியமனம் செப்டம்பர் முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் வேளையில் அவரின் நியமன கடிதத்தை தகவல், இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இன்று வழங்கினார்.

WATCH OUR LATEST NEWS