கணவரின் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 38 வயது மாது ஒருவர் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ஜாலான் கோல சிலாங்கூர், ஜெராம், ஜாலான் பாகான் சுங்ஙை ஜங்குட் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த மாதுவின் 35 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடல் முழுவதும் ரணமான நிலையில் குற்றுயிரும், குலையுயிருமாக மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட அந்த மாதுவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் ரம்லி காசா தெரிவித்தார்.
அந்த மாதுவின் கணவர் , கோலசிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.