சிங்கப்பூருக்கு ஒரு நாள் அலுவல் பயணம்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நாள் அலுவல் பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார். பிரதமருடன் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இ​ஸ்மாயிலும் சென்றுள்ளார். பிரதமரி​ன் சிறப்பு விமானம் இன்று காலை 10.30 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பிரமுகர் கொம்ப்லெக்ஸ் பகுதியில் தரையிறங்கியது. பிரதமரை சிங்கப்பூருக்கான மலேசியத் ​தூதரர் டத்தோ டாக்டர் அஸ்ஃபார் முஹமாட் முஸ்தாஃபார் வரவேற்றார்.

நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர் கடந்த ஜனவரி மாதம் மேற்கொண்ட பயணத்திற்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார்  சிங்கப்பூருக்கு  வருகை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

சிங்கப்பூரில் மைகென் இன்ஸ்திதுட் ஆசியா சம்மிட் 2023 என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் இரு முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS