அரசாங்க ஊழியர் ஒருவரை அடித்துக் கொன்றதாக கப்பல் நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் ஒருவர், கிளந்தான், தானா மேரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஹாருன் நரெசட் இப்ராஹிம் என்ற 46 வயதுடைய அந்த பொறியிலாளர், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் தானா மேரா என்ற இடத்தில் சிக்கன் சோப் சிக்கு என்ற கடையின் முன் 51 வயதுடைய ஓர் அரசு ஊழியரான துவான் முஹமாட் சாலெஹ் துவான் இப்ராஹிம் என்பவரை அடித்துக்கொன்றதாக குற்றறச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த பொறியியலாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.