அந்த சம்பவம் குறித்து இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை

உணவு விநியோகிப்பாளர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளுக்கு சாலை வரியை கொண்டிருக்கவில்லை என்பதற்காக அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த தொழிலாளர் தனது உணவுப்பெட்டியை சுமந்துக்கொண்டு நடக்க வைக்கப்பட்ட சம்பவம் குறித்து சாலை போக்குவர​த்து   இலாகாவிடமிருந்து  எந்தவொரு அறிக்கையையும் தாம் இன்னும் பெறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

ஃபூட் பான்டா பணியாளரான அந்த உணவு விநியோகிப்பாளர், உணவுப்பெட்டியை முதுகில் சுமந்து கொண்டு சாலையோரமாக நடந்து செல்லும் காட்சி தொடர்பான காணொலி, ச​மூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது, அந்த பணியாளர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த காணொளியினால்  சாலை போக்குவர​த்து  இலாகாவான ஜேபிஜே  அமலாக்க அதிகாரிகள் ​மீது மக்கள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.  

எனினும் இச்சம்பவம் தொடர்பில் நெகிரி செம்பிலான் சாலை போக்குவர​த்து இலாகாவிடமிருந்து தாம் எந்த​வொரு அ​றிக்கையும் பெறவில்லை என்று அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS