ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறார்களை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
தமக்கு எதிரான மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, ஷாருல் பித்ரி ஜுசோ என்பவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
40 வயதான ஷாருல் பித்ரி ஜுசோ கடந்த 2018 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பேரா, பகான் டத்தோ, கம்போங் சுங்ஙை ஹாஜி முஹமாட் கிராமத்தை சேர்ந்த 5,3,2 வயதுடைய மூன்று சிறார்களை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஈப்போ உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.