கணவன் மனைவி உயிர் இழந்தனர்

கணவன் மனைவி பயணித்த மோட்டார் சைக்கிள், இராணுவ லோரியின் பின்புறம் மோதியதில் அவ்விருவரும் உயிர் இழந்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை 87.0 கிலோ மீட்டரில் சுங்கை பட்டாணிக்கு அருகில் நிகழ்ந்தது.

இராணுவ லோரியில், மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்துக் கொண்டதில் ஓர் இராணுவ வீரரான 41 வயது ரிட்சுவான் சாலெஹ் ரம்லியும் அவரின் 39 வயது மனைவி ரொஸ்மாவாத்தி இஸ்மாயில் என்பவரும் உயிரிழந்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS