வரும் மஇகா உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் டத்தேஸ்ரீ எம். சரவணன் ஆகியோருக்கு போட்டியிருக்கக் கூடாது என்று பகாங் மாநில மஇகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று பெந்தோங்கில் நடைபெற்ற பகாங் மாநில மஇகாவின் 77 ஆவது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எட்டு தீர்மானங்களில் விக்னேஸ்வரனும், சரவணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் அடங்கும் என்று மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் வி.ஆர்முகம் தெரிவித்தார்.