நாட்டின் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வாழ்க்கைச் செலவினத்தை குறைப்பதற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், போட்டித்தன்மையை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சாதகமான முதலீட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இது விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய பொருளாதார திசைக்கு ஏற்ப நிலையான மற்றும் மக்கள் சார்புடைய பொரளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவே 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் நோக்கமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இன்று தெரிவித்துள்ளார்.