2024 ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்து பெற்றோர்கள் ஏமாற்றம்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டில் வழங்கப்படும் ஆயத்த நிதி உதவி குறித்து பிரதமர் எந்தவொரு அறிவிப்பும் வெளியிட்டாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

2024 / 2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, சீனப்புத்தாண்டு, நோன்புப்பொருநாள் போன்ற விழாக்காலங்கள் கொண்டாடப்படும் பட்சத்தில் மாணவர்களை முன்கூட்டியே தயார்படுத்தப்படுவதற்கு இதுநாள் வரையில் வழங்கப்பட்டு வந்த ஆயத்த நிதி உதவி குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இது உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது என்று பெறோர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS