பிரதமரின் சிறப்பு அதிகாரி பொய்யான அறிக்கைகளுக்கு மூளையாக செயல்பட்டதாக தொழிலதிபர் குற்றம் சாட்டுகிறார் பி.எம்.ஓ அறிக்கை

சென்ற வாரம் கிள்ளானில் நடைபெற்ற விடியலை நோக்கு என்ற கூட்டத்தில், இந்தியர்கள் தங்களுகென்று ஒரு புதிய கட்சி வேண்டும் என எடுத்த தீர்மானத்தை, மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரிடம் இது குறித்து முன் வைக்கப்படும் என பி தியாகராஜன் வெளியிட்டக் கருத்தை, பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி எம் சண்முகம் தவறான புரிதல் கொண்டு, அன்வாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் புதிய கட்சியைத் தோற்றுவிக்க எண்ணம் கொண்டுள்ளதை பிரதமரிடம் கூறுவேன் எனபி தியாகராஜனின் கூற்றை புதிய கட்சியை தொடங்க பிரதமர் அனுமதி வழங்கி விட்டார் என தான் கூறியாதாக தகவலை மாற்றி கூறிய நிலையில், பிரதமர், புதிய க்ட்சி தோற்றத்திற்கு தான் எந்த ஆதரவும் வழங்கவில்லை என்றும் தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் துறை விளக்க கடிதம் வெளியிட்டிருந்தது.

எம் ஷண்முகம் , திட்டமிட்டே இந்தச் செயலை செய்துள்ளதாகவும் இந்த விவரம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என பி தியாகராஜன் மலேசிய மினி நாளிதழ் வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS