கடந்த 2022 ஆம் ஆண்டில் பன்டார் புன்சாக் ஆலாமில் பொது கழிப்பறைக்கு தீயிட்டு, சேதப்படுத்திய குற்றத்திற்காக வயது குறைந்த இரண்டு இளைஞர்களுக்கு 6 மாத காலத்தில் 100 மணி நேரம் பொது கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு கோலசிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அவ்விரு இளைஞர்களும் தங்களுக்கான கழிப்பறையை சுத்தம் செய்யம் சமூகப் பணிகளை நிறைவு செய்யும் வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ஆயிரம் வெள்ளி நன்னடத்தை ஜாமீன் விதிப்பதாக மாஜிஸ்திரேட் சிதி ஹாஜார் அலி ஆணைப் பிறப்பித்தார்.
16 வயதுடைய அவ்விரு இளைஞர்களும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு இத்தகைய இலகுவான தண்டனையை விதிப்பதாக மாஜிஸ்திரேட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.