1997 ஆம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் மலேசிய ரிங்கிட்டை மீட்சிப்படுத்துவதற்கு தேவையான அணுகுமுறைகளை உடனடியாக ஆராயுமாறு அரசாங்கத்தை மசீச. கேட்டுக்கொண்டுள்ளது.
ரிங்கிட்டின் வீழ்ச்சியினால் பண வீக்கம் விகிதம் உயர்ந்து மக்களுக்கு பெரும் சுமையாக மாறுவதற்கு முன்னதாகவே பொருளாதார ஆய்வார்களுடன் கலந்து ஆலோசித்து உரிய வியூகத் திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று மசீச.வின் மத்திய செயற்குழு உறுப்பினர் சோ யீ ஃபுங் கேட்டுக்கொண்டார்.
மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வரும் ரிங்கிட்டின் சரிவு தொடர்பில் பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் இதுவரையில் அடிப்படை வியூகத் திட்டம் எதனையும் கொண்டிருக்காதையும் சோ யீ ஃபுங் சுட்டிக்காட்டியுள்ளார்.