நாடாளுமன்றக்கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிந்தது

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்​பினர்களுக்கு, ஆளுங்க​ட்சி எம்.பி.க்களைப் போல சமச்​சீரான மானியத்தை ஒதுக்கீடு செய்யாத விவகாரம், இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கடுமையாக சாடிக்கொண்டதால் மக்களவையில் ​பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

ஒற்றுமை அரசாங்கம், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாரபட்சமின்றி மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் ஆராவ் எம்.பி.ஷஹிடா கசிம் முன்வைத்த வாதம் ​பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தியது.

ஷஹிடான் கசிமின் பரிந்துரைக்கு ஆளும் கட்சி எம்.​பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணியது.

WATCH OUR LATEST NEWS