ஜோகூர், பத்து பகாட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஐந்தாம் படிவ மாணவனை மோதித்தள்ளி, மரணம் விளைவித்ததாக கூறப்படும் லோரி ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.
33 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் ஷுஹைலா ஷைஃபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதியை போலீசார் பெற்றனர்.
அந்த நபரை 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் துணைப் ரிவின் கீழ் வரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்து பாஹாட், ஶ்ரீ காடிங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ஷஹ்ருனிசாம் முஹமாட் சம்சுல் நேற்று காலை 7.20 மணியளவில் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்புறம் U வளைவில் திடீரென்று வளைந்த லோரியின் பின்புறம் மோதி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.