கிள்ளான் பள்ளத்தாக்கில் திறந்த கட்டண வசூலிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் இரயில் சேவைகளில் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் திறந்த கட்டண வசூலிப்பு முறை முழுமையாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் விருப்பத்தேர்வுகள் வழங்கப்படும் என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கிளானா ஜெயா, அம்பாங் எல்.ஆர்.டி., புத்ரா ஜெயா எம்.ஆர்.டி. மற்றும் கே.எல். மோனோ ரயில் தடங்களை உள்ளடக்கிய ரெப்பிட் ரயில் சேவையில் இந்த திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் மேம் பாட்டுப் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்படும் எனக் கூறிய அந்தோணி லோக் , ஓராண்டிற்குப் பிறகு இத்திட்டம் அமலாக்கம் காணும் என்றார்.

WATCH OUR LATEST NEWS