மைஏர்லைன்க்கு காரணம் கோரும் கடிதம்

உள்ளூர் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதியுடன் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது தொடர்பில் அந்த மலேசிய விமான நிறுவனத்திற்கு காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை கண்காணிக்கும் ஆணையமான மாவ்கோம், விளக்கம் கேட்டு, அந்த விமான நிறுவனத்திற்கு காரணம் கோரும் கடிதம் வழங்கியுள்ளது.

மைஏர்லைன்க்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் நிபந்தனைகளை நிறைவு செய்ய அந்த விமான நிறுவனம் தவறிவிட்டதாக மாவ்கோம் குற்றஞ்சாட்டியுள்ளது.

WATCH OUR LATEST NEWS