தற்போது மழைக்காலமாக இருப்பதால் நீர் நிலைகள் வீற்றிருக்கும் இடங்களுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தீயணைப்பு, மீட்புப்படை இன்று எச்சரித்துள்ளது.
நீர் வீழ்ச்சிப்பகுதிகளில் குளிப்பதை மக்கள் முற்றாக தவிர்க்க வேண்டும் என்று அவ்விலாகா வலியுறுத்தியுள்ளது. மலை முகட்டிலிந்து பாயக்கூடிய நீரின் வேகம் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் அது நீர் பெருக்கத்திற்கு வித்திடலாம் என்று மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை தலைமை இயக்குநர் அப்துல் வஹாப் மாட் யாசின் அறிவுறுத்தியுள்ளார்.