பிரதமருக்கு தார்மீக ஆதரவு நல்கப்படும்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் வழங்குவாரேயானால் அவரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரிப்பதில் பிரச்னை இருக்காது என்று பெரிக்காத்தான் நேஷனலின் லங்காவி எம்.பி.முஹமாட் சுஹைமி அப்துல்லா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் அன்வாரை ஆதரிப்பது தொடர்பில் சமுக வளைத் தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் விளக்கம் அளிக்கையில் முஹமாட் சுஹைமி இதனை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS