தி எட்ஜ் பில்லியன் ரிங்கிட் கிளப் விருதுகளில் கார்ல்ஸ்பெர்க் மலேசியா அதிக ரோக்கான முதல் இடத்தைப் பிடித்தது

பங்குதாரர்களுக்கு நீண்டகால நிலையான மதிப்பை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்நிறுவனம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இலாப ஈவு ஈட்டுவதற்கான விருதை வென்றுள்ளது.

கோலாலம்பூர் – அக். 26

மதிப்புமிக்க தி எட்ஜ் பில்லியன் ரிங்கிட் கிளப்பின் 14வது பதிப்பில் வாடிக்கையாளர் தயாரிப்புகள், சேவைகள் பிரிவில் மூன்று ஆண்டுகளில் அதிக இலாப ஈவு ஈட்டி ண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது கார்ல்ஸ்பெர்க் பிரூவரி மலேசியா பெர்ஹாட் நிறுவனம்.

தொடர்ந்து வளர்ந்து வரும் செயலாக்கச் சூழலில் நீண்டகால நிலையான வளர்ச்சியையும் பங்குதாரர் மதிப்பை வழங்குவதிலும் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறை வெற்றி கண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டறிக்கையின்படி இதன் பங்குதாரர்கள் இலாப ஈவாக கடந்த ஆண்டில் 181.1%ஆகவும் 2021இல் 107.9%ஆகவும் 2020 இல் 105.1% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. .

இந்த விருதை வென்றது எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த அங்கீகாரத்தில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், ஏனெனில் இஃது எங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பங்குதாரர்களுக்கு மதிப்பளிப்பதில் எங்களின் இடைவிடாத முயற்சிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் நிர்வாக இயக்குநர், ஸ்தெஃபனொ க்லினி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

எங்கள் அர்ப்பணிப்பு மிகுந்த ஊழியர்கள், நம்பகமான விநியோகிப்பாளர்கள், வர்த்தகப் பங்காளிகள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2022 டிசம்பர் 31 வரை கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனத்தின் சந்தை மூதலீடு ரிம7.0 பில்லியனாக இருந்தது.

இந்த ஆண்டு பிஆர்சி மதிப்பீட்டில் பரிந்துரைக்கப்பட்ட 181 நிறுவனங்கள் பட்டியலில் ரிம 1 பில்லியனுக்கும் மேற்பட்ட சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பெயரும் இடம்பெற்றிருந்தன. அந்தப் பட்டியலில் கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனமும் ஒன்றாகும்.

31 மார்ச் 2023 நிலவரப்படி, மேற்குறிப்பிட்ட 181 நிறிவனங்களில் சந்தை முதலீடு ரிம 1.49 திரில்லியன் ஆகும். இந்த மதிப்பானது, புர்சா மலேசியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் 90.4% ஆகும்.

எட்ஜ் பிஆர்சி விருதுகள் மலேசியாவின் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களைக் கௌரவிப்பதாகும். இது மலேசிய நிறுவனங்களை நிதி நிலையிலும் , சமூகப் பொறுப்பு கொண்ட நிறுவனமாகவும் இன்னும் சிறப்பாக இருக்கத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த விருதுகள்.

தி எட்ஜ் பிஆர்சி விருது புதிய விருது அல்ல. இந்நிறிவனத்திற்கு இஃது ஆறாவது விருதாகும். கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் சமூக நலன் மிக்க சிறிந்த நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றுள்ளது கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனம்

சுற்றுச் சூழல், சமூகநலன் சார்ந்த விவகாரங்களில் கார்ல்ஸ்பெர்க் மலேசியா தனது திடமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி சமூகங்கத்திற்கு திரும்பிக் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக அந்த விருந்தை இருமுறறை வென்றறது.

கார்பன் வெளிப்பாடு திட்டம் கார்பன் டிஸ்க்லோஸர் ப்ரோஜெக்கில் ஏ தரம் பெற்ற கார்ல்ஸ்பெர்க் மலேசியா, அண்மையில் மோர்கன் ஸ்டான்லி கேபிட்டல் இன்டெர்நேஷ்னல் ஆல் மேற்கொள்ளப்பட்ட இஎஸ்ஜி நீண்ட கால அபாயங்கள் தொடர்பான சோதனையில் ஏ தர மதிப்பீட்டையும் அது பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனத்துன் வெளிப்படைத் தன்மை இந்த தர மதிப்பீடுகள் காட்டுகின்றன.

WATCH OUR LATEST NEWS