அம்பாங், லெம்பா ஜெயா செலாத்தான் னில் உள்ள ஒரு சிறார் காப்பகத்தில் பாலியல் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஓர் அந்நிய ஆடவரையும், உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
27 வயதுடைய அந்த இரு இளைஞர்களும் நேற்று மாலை 5 மணியளவில் அம்பாங், ஜாலான் ஶ்ரீ கெமுனிங் கில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாய் தெரிவித்தார்.
சிறார் காப்பகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் இரு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.