மாணவர்கள் கொண்டு வரக்கூடிய உபகரணங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இராணுவம் மேற்கொண்டு வரும் அடக்குமுறையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய நிலையில் பள்ளி அளவில் நடத்தக்கூடிய மனிதாபிமான ஒற்றுமை வாரத்தில் மாணவர்கள் உபகரணங்களை கொண்டு வருவதை பள்ளி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

பள்ளி அளவில் நடத்தப்படும் பாலஸ்தீனர்கள் மீதான ஒற்றுமை வாரத்தில் மாணவர்கள் விளையாட்டுத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் போன்றவற்றை கொண்டு வராமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அதேவேளையில் இந்த ஒற்றுமை வாரத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS