ஹ்.ஆர்.டி கோர்ப். எனப்படும் மனிதவள மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாகம், அதன் நிதி விவகாரங்கள் தொடர்பாக பொது கணக்காய்வுக்குழுவான பி.ஏ.சி யின் விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயராக இருப்பதாக மனித வள அமைச்சர் வி. சிவகுமார் அறிவித்துள்ளார்.
மனித வள அமைச்சின் மேற்பார்வையில் உள்ள ஹ்.ஆர்.டி கோர்ப். தொடர்பான விசாரணையில் வரும் திங்கட்கிழமை அமைச்சர் சிவகுமார் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு பொது கணக்காய்வுக்குழு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
இந்த விசாரணையில் பொது கணக்காய்வுக்குழுவிற்கு தாமும், தமது தலைமையிலான மனித வள அமைச்சும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சிவகுமார் தெரிவித்துளொளர்.
ஹ்.ஆர்.டி கோர்ப். பினால் நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் அந்த பயிற்சிகளின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்நிறுத்தி ஒதுக்கப்பட்ட நிதி நிர்வாகம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக பொது கணக்காய்வுக்குழு தம்மை விசாரணைக்கு அழைத்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.