எச். ஆர்.டி. கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டுக்கழகத்தின் நிதி விவகாரம் தொடர்பில் பொது கணக்காய்வுக்குழுவான பி.ஏ.சி யின் விசாரணை தொடர்பில் ஆருடங்களை நிறுத்திக்கொள்ளுமாறு மனித வள அமைச்சர் வி.சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
எச். ஆர்.டி. கோர்ப் தொடர்பில் பயிற்சி நிதி மேலாண்மை சிக்கல்கள் மற்றும் செயல்திறன் விசாரணைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குதாக சிவகுமார் மறு உறுதிப்படுத்தினார்.
பி.ஏ.சி என்பது நாடாளுமன்றத்தின் கீழ் நிறுவப்பட்ட பொது கணக்காய்வுக் குழுவாகும். பி.ஏ.சி தனது முக்கியப் பணியை சரிபார்த்து கண்காணிப்பது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக சிவகுமார் தெரிவித்தார்.
நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த தேசிய நிதி நிர்வாகம் மற்றும் நாட்டின் நிதி நிர்வாகம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது கணக்காய்வுக்குழுவின் விசாரணையை பாதிக்கக்கூடிய ஊகங்கள் மற்றும் ஆருடங்களை தவிர்த்துக் கொள்ளமாறு அனைத்து தரப்பினரையும் சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.