அது தனியார் துறையின் டோல் சாவடியாகும்

நாட்டின் முக்கிய சுற்றுலா மலைவாசல்தளமான கெந்திங் ஹிலன்ஸ் க்கு செல்லும் சாலையில் வாகனங்களுக்கு டோல் கட்டணம் விதிக்கும் டோல் சாவடி நிர்மாணிப்புத் திட்டத்தில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று எல்.எல்.எம் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

கெந்திங் மலைக்கு செல்லும் மலைவாசல் சாலை, முழுக்க முழுக்க தனியார் துறைக்கு சொந்தமான சாலையாகும். எனவே அந்த சுற்றுலாத் தளத்திற்கு செல்லும் சாலையில் டோல் கட்டணம் விதிக்கப்படுவதற்கும், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை டோல் சாவடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த நெடுஞ்சாலை வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது..

இதற்கு முன்பு இவ்விவகாரம் குறத்து பேசிய டிஏபி, பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மான், அந்த தனியார் நெடுஞ்சாலையில் டோல் கட்டண சாவடி அமைக்கப்பட்ட போதிலும், அத்திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக ஊராட்சி மன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS