தமது தலைமையிலான மடானி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த முதல் ஆண்டிலே சிறப்பு அம்சங்களில் ஒன்றாக நாடு தெளிவான பொருளாதார திசையை நோக்கி, வலுவான பொருளாதார குறியீட்டை கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை அழுத்திக்கொண்டு இருந்த பண வீக்க அழுத்தங்கள் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளன. வேலையின்மை விகிதம் 3.4 விழுக்காடாக குறைந்துள்ளது. தொற்று நோய் விகிதம் குறைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் மலேசிய பொருளாதாரம் 3.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை எட்டுவதற்கு 4 விழுக்காட்டை நோக்கி நாடு நெருங்கிக் கொண்டு இருப்பதாக இன்று நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.