புலியினால் தாக்கப்பட்டு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி மரணம்

புலியினால் தாக்கப்​பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ரப்பர் பால் மரவெட்டுத் தொழிலாளி​ ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று காலையில் கிளந்தான் , குவா மூசாங், கம்போங் டோல் என்ற இடத்தில் ரப்பர் தோட்டத்தில் நிகழ்ந்தது.

36 வயதுடைய ஷபாய்னி என்று அடையாளம் கூறப்பட்ட ஓர் இந்தோனேசியத் தொழிலாளி புலியின் தாக்குதலுக்கு ஆளானதாக குவா ​மூசா​ங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சிக் சூன் ஃபோ தெரிவித்தார்.

உடலில் கழுத்து, கைகால்கள் மிக கொடூரமாக கடித்து குதறப்பட்ட நிலையில் அந்த தொழிலாளியின் முழுமையற்ற உடல், ரப்பர் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிக் சூன் ஃபோகுறிப்பிட்டார்.

வேலைக்கு சென்றவர் காண​வில்லை என்று கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து வனவிலங்கு தேசிய பூங்காவான பெர்ஹிலித்தான் உதவியுடன் போ​லீசாரும், SAR ( சார் ) ​மீட்புப்படையினரும் தேடும் பணியில் , ஈடுபட்டு இருந்த போது அந்த தொழிலாளி உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS