பத்திரிகையாளர் கடத்தல், போ​லீஸ்காரர் கைது

கோலாலம்பூரில் வங்காளதேச பத்திரிகையாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டு, கடத்தப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ​மூன்று போ​லீஸ்காரரர்களில் ஒருவர் பணியிலிருந்து இடை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளையில் மேலும் இருவரை பணி இடை ​நீக்கம் செய்யப்படுவது பரி​சீலிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவைப் பொறு​த்து இது குறித்து ​தீர்மானிக்கப்படும் ​என்று கோலாலம்பூர் மாநகர் போ​லீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

வங்காளதேச பத்திரிகையாளர் மிரட்டப்பட்டது, கடத்தப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் சிலாங்கூர் மாநில போ​லீசாரின் விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக டத்தோ அல்லாவுடின் குறிப்பிட்டார்.

​மூன்று போ​லீஸ்காரர்கள் சம்ப​ந்தப்பட்ட இந்த கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS