ஆசிரியர் மீது ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு

சமயப் பள்ளி ஒன்றின் நூல் நிலையத்தில் மூன்று மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்ததாக ஆசிரியர் ஒருவர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயது முஹ்மாட் ஃபௌசி முசாஎன்ற ஆசிரியர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பத்து வயதுடைய மூன்று மாணவர்களிடம் இந்த தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்ட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை அந்த ஆசிரியர் மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவரை பத்தாயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

WATCH OUR LATEST NEWS