ஐவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் முதிர்நிலை உயர் அதிகாரி ஒருவர் நிதித்துறையை சேர்ந்த பெண் ஆலோசகர் ஒருவக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் இதுவரையில் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் இதுவரையில் ஐவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இனி புதிய சாட்சிகள் யாரும் இல்லை என்று ஐ.ஜி.பி. விளக்கினார்.

விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதால் மேற்நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ரசாருடின் ஹுசெயின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS