பிரதமராக லட்சியம் இல்லை என்கிறார் கெடா மந்திரி பெசார்

நாட்டின் பிரதமராகும் லட்சியம் தமக்கு இருந்ததில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பிரதமர் பொறுப்பை தாம் வகிக்க வேண்டும் என்று கட்சி விரும்பினால் அந்த பொறுப்பை நிராகரிக்கவும் தாம் தயாராக இல்லை என்று பாஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக சனூசி முகமட் நூர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு தாம் தலைமையேற்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருக்குமானால் அதனை மனம் திறந்து ஏற்றுக்கொள்வதாக சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS