பகாங் மற்றும் திராங்கானு ஆகிய இரு மாநிலங்களில் உள்ள பெல்டா நிர்வாகத்திற்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடவடிக்கையில் தாங்கள் இறங்கியுள்ளதாக பகாங் மற்றும் திராங்கானு மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் செ.உகனேஸ்வரன் கூறினார்.
இதன் தொடர்பாக முதல் கட்டமாக ஃபெல்டஃ பெரா செலாத்தான் 1, 2 ஆகிய இரண்டு தோட்டங்களை சேர்ந்த 400 வங்காளதேசத் தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அவர்கள் உறுப்பினராக சேர்வதற்கு ஃபெல்டா தோட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் முழு ஆதரவு நல்குவதற்கு உறுதி பூண்டுள்ளனர் என்று உகனேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரனின் ள் ஆலோசனை பேரில் நடத்தப்பட்ட இந்த முதல் கட்ட சந்திப்பில் வங்காளதேச தொழிலாளர்களுக்கு அவர்களின் மொழியில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் அவசியம், அதன் மூலம் கிடைககும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட போது அனைவரும் சங்கத்தில் உறுப்பியம் பெறுவதற்கு ஆர்வம் காட்டியதாக க உகனேஸ்வரன் குறிப்பிட்டார்.