பத்து கோடி வெள்ளி மதிப்பிலான அரிய மண்

பினாங்கு மாநிலம் பத்து கோடி வெள்ளி மதிப்பிலான அரிய மண் கனிம வளத்தை கொண்டு இருப்பதாக மாநில முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் கனிமவள, பூவியறிவியல் துறை மேற்கொண்ட மண்ணாய்வில் இந்த அரிய மண் வளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தெலுக் பாஹாங், பாலிக் புலாவ், நிபோங் தெபால போன்ற வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட மண்ணாய்வில் இந்த அரிய மண் கண்டு பிடிக்கப்ப்டடுள்ளதாகவும், இது தொடர்பாக கனிமவள, பூவியறிவியல் துறையுடன் மேலும் சில சந்திப்புகளை மாநில அரசாங்கம் நடத்தவிருப்பதாகவும் சொவ் கொன் யொ தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS