2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜனவரி முதல் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில் ஜப்பானின் மேற்கு பகுதியில் இஷிக்காவா பிரதேசத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்துற்கு பிறகு 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்த எட்டு பேர் மரணம் அடைந்து இருப்பதாகவும் பலர் காயமுற்றதகாவும் கூறப்படுகிறது.
45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் எதிரொலியாக 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தினால் வெளியிடப்பட்ட உயர் மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் பின்னர் கைவிட்டது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அதேபோன்று அசம்பாவிதங்களை தடுக்க ஜப்பான் அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.