ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது

2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜனவரி முதல் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில் ஜப்பானின் மேற்கு பகுதியில் இஷிக்காவா பிரதேசத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்​ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்துற்கு பிறகு 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்த எட்டு பேர் மரணம் அடைந்து இருப்பதாகவும் பலர் காயமுற்றதகாவும் கூறப்படுகிறது.

45 ஆயிரத்திற்கும்​ மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் எதிரொலியாக 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நிலநடுக்கத்​தினால் வெளியிடப்பட்ட உயர் மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் பின்னர் கைவிட்டது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ​வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

அதேபோன்று அசம்பாவிதங்களை தடுக்க ஜப்பான் அரசாங்கம் ​​தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS