டிபிகேஎல் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை

சாலை போக்குவரத்தை தடுக்கும் வாகனங்களுக்கு எதிராக 35 சமான்களும் உரிமம் பெறாத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ஒன்பது பறிமுதல் நடவடிக்கைகளையும் கோலாலம்பூர் டேவான் பண்டாராயா (DBKL) நேற்று மேற்கொண்டது.

ஜாலான் சிலாங், லெபோ புடு – வை சுற்றியுள்ள அமலாக்கத் துறையினரால் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும் வெளிநாட்டு வணிகர்கள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் ஆவணப்படுத்துவதற்காக செராஸ், தாமான் மிஹார்ஜா மிஹார்ஜா- வில் உள்ள டிபிகேஎல் -லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டிபிகேஎல் தெரிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS