வீட்டு உடையில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வீட்டு உடையில் செல்வதற்கு கிளந்தான் கல்வித்துறை அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 90 விழுக்காடு மாணவர்கள் இன்று பள்ளி சீருடையின்றி சென்றதாக தெரியவந்துள்ளது.

வெள்ளத்தால் பள்ளி சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள் போன்றவை பாதிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதை உச்சாகமாக காத்திருந்து சென்றதாக 11 வயதுடைய,முஹமாட் ஷாஃபிக் இக்ராம் மஸ்லான் தெரிவித்தார்.

கிளந்தான், தேசிய பள்ளி Gual To’Deh – வில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வீட்டு ஆடையில் வருவதற்கு ஊக்குவிக்கப்படுவதாக பள்ளி ஆசிரியர் கூறியதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அச்சிறுவன் கூறினார்.

வெள்ளத்தில் அனைத்து பொருட்களும் பாதிக்கப்பட்ட போதிலும் கல்வி மிகவும் அவசியம் என்பதால் தன் மகனை இன்று பள்ளிக்கு அனுப்பி வைத்ததாக 54 வயதுடைய மஸ்லான் அப்துல் சாமாட் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS