ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் ஒருவர் படுங்காயம்

ஜோகூர், Eastern Dispersal Link (EDL) நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளானதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் பிக்ஆப் ட்ரக் ஒன்று எதிரே வந்த வாகனத்தை தவிர்க்க முற்பட்டபோது இச்சம்பவம் நடந்ததாக ஜோஹோர் பாஹ்ரு காவல்துறை தலைவர் ஏசிபி ராவுப் செலமாட் தெரிவித்தார்.

அக்கார் நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததோடு எதிரே வந்த 3 வாகனங்கள் மீது மோதி செல்லபட்டதாக ராவுப் செலமாட் விவரித்தார்.

இவ்விபத்தில் ஒருவர் கை கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்கலினால் சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளையில் மற்ற நால்வரும் சிறு காயங்களுக்கே ஆளாகினர்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 43 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS