மக்களுக்கான பாடு பதிவுத் திட்டம் தொட​க்கப்பட்டது

தனிநபர்கள், குடும்ப வருமானம் தொடர்பான தகவல்களை முறைப்படுத்துவதற்கு பாடு எனப்படும் முதன்மை தரவுகள் தளம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பல் 12.15 மணியளவில் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த பாடு முதன்மை தரவுகள் தளத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மக்கள் தங்களின் குடும்ப விவரக்குறிப்புகளை இன்று ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த தரவுகள் தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள​ப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு குடும்பதினரின் சமூகவில் பொருளாதார ​சூழலை கண்டறிவதற்கும், அவர்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள் மற்றும் இதர ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பான சலுகைகளை முடிவு செய்வதற்கும் ஒவ்வொரு குடும்பதினரின் வருமானத்தை துல்லியமாக கண்டறிவதற்கும் இந்த பாடு தரவுகள் தளம் மிக இன்றியமையாததாக கருதப்படுகிறது.

அரசாங்கத்தின் உதவிகள் இலக்குக்கு உரிய மக்களை விரைந்து சென்றடைவும், சிறப்பான, திறன்வாய்ந்த சேவையை வழங்கவும் இந்த பாடுதரவுகள் தளம் மிகப்பெரிய பங்கினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS