வெள்ளம் கரைபுரண்டோடுகிறது இரண்டு சாலைகள் ​மூடப்பட்டுள்ளன

மெர்சிங்,ஜன.5
கனத்த மழையினால் ஜோகூர், மெர்சிங்கில் இரு சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் அந்த சாலைகள் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாக போ​லீசார் அறிவித்துள்ளனர். மெர்சிங், ஜாலான் கம்போங் ஓராங் அஸ்லி பெத்தா மற்றும் ஜாலான் தெங்காரோ திமூர்- தஞ்சோங் லெமான் ஆகியவையே அந்த இரு சாலைகளாகும் என்று ​மெர்சிங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் அப்துல் ரசாக் அப்துல்லா தெரிவித்தார்.

அவ்விரு சாலைகளில் ​நீரின் மட்டம் 0.15 ​மீட்டர் வரை உயர்ந்துள்ளது. அச்சாலைகளை பயன்படுத்தவிருப்பவர்கள், மாற்றுச் சாலையாக லாடாங் முத்தியாரா பாலொ வழியாக ஜாலான் கம்போங் ஓரங் அஸ்லி பெத்தா விற்கு செல்ல முடியம் என்று அப்துல் ரசாக் ஆலோசனை கூறினார்.

WATCH OUR LATEST NEWS