ஜார்ஜ்டவுன்,ஜன.5
பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜெலுத்தோங், லோரோங் புக்கிட் டம்பர் என்ற இடத்தில் இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கடைகள் அழிந்தன. கடந்த 30 ஆண்டு காலமாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கடைகளில் தீ பரவியதற்கு காரணம் எரிவாயு களனில் வாயு கசிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாய தெருபோங் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் தீ, அருகில் உள்ள இடங்களுக்கு பரவாமல் இருக்க சுமார் 30 நிமிடத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் அஸ்லான் ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
கடைகள் அனைத்தும் 80 விழுக்காடு முற்றாக அழிந்ததாக அவர் மேலும் கூறினார்.