பினாங்கு மாநிலத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு 600 வெள்ளி உதவித் தொகை

ஜோர்ஜ்டவுன்,ஜன.5
பினாங்கு மாநிலத்தில் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்துநர்களுக்கு உதவித் தொகையாக ஒரு முறை வழங்கக்கூடிய 600 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை நிறைவு செய்யக்கூடிய ஓட்டுநர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று பினாங்கு பொது கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் சைரி கிர் ஜொஹாரிதெரிவித்துள்ளார்.

இந்த 600 வெள்ளி உதவித் தொகையை பெறுவதற்கு டாக்கி ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்துநர்கள் ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இவ்வாண்டு முதல் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த 600 ​வெள்ளி உதவித் தொகை வரும் மா​ர்ச் மாதம் வழங்கப்படும் என்று சைரி கிர் ஜொஹாரி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS