கோலாலம்பூர்,ஜன.16
18,000 வெள்ளி லட்சம் கேட்டதற்காக இரண்டு முன்னாள் உள்ளூர் அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கைது செய்துள்ளது.
30 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் தங்களை புக்கிட் அமான் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளாக காட்டி கொண்டு பணமோசடி புரிந்த அந்நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றால் குறிப்பிட்ட தொகையினை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி 10,000 வெள்ளியை முன் பணமாக செலுத்தியதாகவும் மீதமுள்ள 8,000 வெள்ளியை நேற்று கொடுத்ததாகவும் விசாரணையில் கண்டறியப்படுகிறது.
ஒருவர் நேற்று மாலை 5.10 மணியளவில் தலைநகரில் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொருவர் நேற்று இரவு 8.57 மணியளவில் கோலாலம்பூர் MACC அலுவலகத்தில் சாட்சியளிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகிக்கும் அவ்விருவரும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி டத்தோ முஹமாட் ஃபௌசி ஹுசின் கூறினார்.