ஆண், பெண் பாலத்தில் சண்டையிட்டு விழுந்தனர்

பட்டெர்வர்த்,ஜன.16
பெராய், செல்லும் 2.8 கிலோமீட்டர் தூரத்தில் ஆணும் பெண்ணும் பினாங்கு பாலத்திலிருந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.

30 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் கடலில் விழுவதற்கு முன் அப்பாலத்திற்கு அருகே சண்டையிட்டு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து இரவு 7:49 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பெராய் தீயணைப்பு, மீட்புபடை தலைவர் ஷாஹ்ருல் முனாவிர் தாஹரென் கூறினார்.

ஹொன்டா சிவிக் ரக வாகனத்தை பயணித்து வந்த அந்நபர்கள் கை கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் பூலாவ் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளதாக ஷாருல் முனாவிர் நேற்று அறிவித்தார்.

அவ்விருவரும் நீரில் மிதப்பதை போன்று வெளியாகியுள்ள 17 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாகி வருகிறது.

WATCH OUR LATEST NEWS