கோலாலம்பூர், ஏப்ரல் 06-
அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்திலும், நியூ ஜெர்சி பகுதியிலும் இன்று காலையில் நில நடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10.20 மணியளவில் நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா பூவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின.மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ள வேளையில் நியூயோர்கில் உள்ள மலேசிய தூதரத்தின் வாயிலாக இச்சம்பவத்தை விஸ்மா புத்ரா உறுதிபடுத்தியுள்ளது.
இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ எதுவும் அறிவிக்கப்படவில்லை.