மும்பைக்கு சாவு பயத்த காட்டிய ஷஷாங்க் சிங்

இந்தியா, ஏப்ரல் 19-

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது ஐபிஎல் 2024 போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி 192 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அதிரடி காட்டிய ஸ்கை 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 78 ரன்களில் நடையை கட்டினார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அவர் 10 ரன்களில் நடையை கட்டினார். டிம் டேவிட் 14 ரன்னிலும், ரொமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாம் கரண் 2 விக்கெட் எடுத்தார். கஜிசோ ரபாடா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இது அவரது 250ஆவது விக்கெட் ஆகும். அதுவும் இஷான் கிஷான் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கடின இலக்க துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஜெரால்டு கோட்ஸி வீசினார்.

அந்த ஓவரில் முதல் பந்தில் சாம் கரண் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை வைடாக வீசினார். மேலும், அந்த பந்து பவுண்டரிக்கும் சென்றது. அடுத்த பந்தில் லெக் பைஸில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. பின்னர் தனது முதல் பந்தை எதிர்கொண்ட பிராப்சிம்ரன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

WATCH OUR LATEST NEWS