கோல குபு பாரு, மே 10-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பான்-னின் மேடையில் தோன்றி பரப்புரையை மேற்கொண்டுவரும் செலாட் கெலாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷித் அசாரி, தாம் இன்னமும் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் என கூறிக்கொள்வதை, டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சாடினார்.
கட்சியில் உறுப்பினராக நீடிப்பது உண்மையென்றால், பின்னர், எப்படி எதிர் தரப்பினரின் வெற்றிக்காக அவர் பரப்புரையை மேற்கொள்ள முடியும்? அவரது அக்கூற்று துளியும் ஏற்கும் வகையில் இல்லை என முகைதீன் யாசின் கூறினார்.
ரஷித் அசாரி என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும். பெர்சத்து கட்சிக்கென சட்டவிதிமுறைகள் உள்ளன.
எதிரணியினருக்காக அவர் பரப்புரையை மேற்கொண்ட போதே, பெர்சத்து சட்டத்தின் படி, அவர் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாக, முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.