கூலிம், மே 10-
கூலிம், பாடாங் செராய், கம்போங் ஏக்கோர் கூச்சிங் – கில் உள்ள ஒரு கருப்பு எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை, இன்று தீப்பிடித்ததை தொடர்ந்து அதை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியப்படுகின்றது.
இன்று காலை 10.29 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூலிம் Hi – Tech தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் அஸ்மிர் ஹாசன் கூறினார்.
மேலும், பினாங்கு, தாசெக் கெலுகோர் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
தீ மற்ற இடங்களில் பரவாமல் இருக்க தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஸ்மிர் ஹாசன் தகவல் வெளியிட்டார்.