ஜொகூர், மே 10-
ஜொகூர், பொண்டியன்-னில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் மூதாட்டி ஆவர்.
இச்சோதனையில் 4.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பல்வேறு போதைப்பொருட்கள் சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர் போலீஸ் தலைவர் எம் குமார் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணி தொடங்கி பிற்பகல் 12 மணி வரையில் ஜொகூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையுடன் மேற்கொண்ட அச்சோதனையில் 40க்கும் 59க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரை சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட 75 வயது மூதாட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டதாக எம் குமார் கூறினார்.
மேலும், ஆறு கார்கள், 21 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணம் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அவர் தகவல் வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்து, அந்த தடுப்பு காவல் இன்றுடன் முடிவடைவதாக எம் குமார் அறிவித்தார்.