எதுவும் நடக்கவில்லை, துன் மகாதீர் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

நாட்டில் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்து இருப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறிக்கொண்ட போதிலும் எதுவும் நடப்பதாக தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மென்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்றவை மலேசியாவிற்கு முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்வற்கதான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரையில் தென்படவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தகவல்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை தளமாக கொண்ட நிறைய நிறுவனங்கள் மலேசியாவின் வளர்ச்சியைக் கண்டு தங்களின் தங்களை மலேசியாவிற்கு மாற்றிக் கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

அரசாங்கத்தின் சொல்லாடல், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS