நிறைய ஆலோசனைகளை வழங்கும்படி அறிவுறுத்து

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் அமலில் உள்ள புதிய கல்வி மேம்பாட்டு திட்டம் தொடர்பான பரிந்துரைகளை பெறும் திட்டத்தில் பொது மக்கள் கல்வி நலன் சார்ந்த ஆலோசகனை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் நிறைவு பெறவிருக்கும் 2013 ஆம் ஆண்டுக்கும், 2025 ஆம் ஆண்டுக்கும் இடையிலான மலேசிய கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு பதிலாக அமல்படுத்தப்படவிருக்கும் புதிய கல்வித் திட்டத்தில் எத்தகைய மேம்பாட்டு அம்சங்களையும், சீர்திருத்தங்களையும் புகுத்த முடியும் என்பது தொடர்பான பரிந்துரைகளை பொது மக்களிடமிருந்து கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.

சமூகத்தின் முழு அணுகுமுறை என்ற தலைப்பில் கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்வித் திட்ட பரிந்துரைகள் மீதான கோரிக்கைகளில் மலேசியாவில் ஒரு முழுமைப்பெற்ற கல்வித் திட்டத்தை வரையும் நோக்கத்தை கொண்டதாகும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS